நாளை மின்தடை ஏற்படும் பகுதிகளின் விபரம் !
பழனி துணை மின் நிலையத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகளின் விபரம் தெரிவித்துள்ளனர்.
Update: 2024-06-14 06:03 GMT
பழனி துணை மின் நிலையத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகளின் விபரம் பழனி துணை மின் நிலையத்தில் 15.6.2024 ஆம் தேதி சனிக்கிழமை பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பழனி துணை மின் நிலையத்தில் இருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளான பழனி நகர், சிவகிரி பட்டி, கலிக்கநாயக்கன்பட்டி, புளியம்பட்டி, கோதைமங்கலம், தும்பலபட்டி, பாறைப்பட்டி, கே.ஜி.வலசு, பாலசமுத்திரம், நெய்க்காரப்பட்டி, ஆயக்குடி மற்றும் சின்ன கலையம்புத்தூர் ஆகிய பகுதிகளுக்கு மின் விநியோகம் நிறுத்தப்படும் என வியாழக்கிழமை மாலை 6 மணி அளவில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் பழனி செயற்பொறியாளர் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.