முதன்மை செயலாளர் தலைமையில் வளர்ச்சிப் பணி ஆய்வு கூட்டம்

மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து துறை அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் அரசு முதன்மை செயலாளர் தலைமையில் நடைபெற்றது.

Update: 2024-05-09 05:00 GMT

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தருமபுரி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து துறை அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் அரசு முதன்மை செயலாளர் / தொழிலாளர் நல ஆணையர் / தருமபுரி மாவட்ட கண்கணிப்பு அலுவலர் முனைவர். அதுல் ஆனந்த், மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி முன்னிலையில் நேற்று மாலை நடைபெற்றது

.இக்கூட்டத்தில் தருமபுரி மாவட்ட கண்கணிப்பு அலுவலர், மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை, வேளாண்மைத்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, பள்ளிக்கல்வித்துறை, சமூக நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, சிறப்பு திட்ட செயலாக்கத்துறை, சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை, விளையாட்டு மேம்பாட்டுத்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து துறை வாரியாக ஆய்வு மேற்கொண்டு, துறை அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

Tags:    

Similar News