காளியம்மன் கோவிலில் பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன்

சேலம் அருகே வீராணம் காட்டுவளவு பகுதியில் உள்ள மூக்கர காளியம்மன் கோவிலில் மாசித்திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் தீ மிதி விழா நேற்று நடந்தது

Update: 2024-02-29 06:20 GMT
சேலம் அருகே வீராணம் காட்டுவளவு பகுதியில் உள்ள மூக்கர காளியம்மன் கோவிலில் மாசித்திருவிழா நடந்து வருகிறது. இதன் சிகர நிகழ்ச்சியாக பக்தர்கள் தீ மிதி விழா நேற்று நடந்தது. இதையொட்டி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதனையடுத்து வீராணம் காட்டுவளவு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.
Tags:    

Similar News