தர்மபுர ஆதீனத்திடம் பள்ளி மாணவிகள் ஆசி பெற்றனர்

மயிலாடுதுறை மாவட்டத்தில் 10 11 12 ஆகிய வகுப்புக்களின் பொதுத்தேர்வில் சாதனை படைத்த குருஞானசம்பந்தர் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் தருமபுர ஆதீனத்திடம் ஆசி பெற்றனர்.

Update: 2024-05-14 18:22 GMT
தருமபுரம் ஆதினம்
மயிலாடுதுறை மாவட்டத்தில் பிளஸ்ஒன் பொதுத்தேர்வில்   தேர்ச்சி விழுக்காடு 86.39 சதவீதம் பெற்று மாவட்ட அளவில் 35 வது இடத்தை மயிலாடுதுறை மாவட்டம் பெற்றுள்ளது. கடந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 83.70 சதவீதமாக இருந்த நிலையில் நிகழாண்டு தேர்ச்சி சதவிகிதம் அதிகரித்துள்ளது. மாவட்ட அளவில்  குருஞானசம்பந்தர் மிஷன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி மாணவி விஜயலட்சுமி 591 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றுள்ளார்.  தொடர்ந்து ஆதினத்திற்கு சொந்தமான மயிலாடுதுறை வைத்தீஸ்வரன் கோவில் பள்ளியில் 10, 11, 12 ஆம் வகுப்பு பொது தேர்வுகளில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகள் தருமபுர ஆதின மடத்திற்கு சென்று தருமபுர ஆதீனத்திடம் அருளாசி பெற்றனர்.
Tags:    

Similar News