மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தர்ணா போராட்டம்

குளப்புறம் ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தர்ணா போராட்டம்

Update: 2024-02-29 11:24 GMT

தர்ணா போராட்டம்

கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே குளப்புறம் ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்தும், குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காணவும், பழுதடைந்த சாலைகள் நடைபாதைகளை செப்பனிடவும், சாலையோரங்களில் உள்ள ஆபத்தான மரங்கள், மக்களுக்கு இடையூறான மின்கம்பங்கள் போன்றவற்றை அகற்றவும், நீர் நிலைகளை பராமரிக்கவும், தரமற்ற முறையில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்படுவதை கண்டித்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாலை நேர தர்ணா போராட்டம் நடைபெற்றது.குளப்புறம் நல்லதங்காடு சந்திப்பில் நடைபெற்ற இந்த போராட்டத்துக்கு வட்டார குழு உறுப்பினர் சுனில் குமார் தலைமை வகித்தார். கிளைச் செயலாளர் லெனின் ஜான், வார்டு கவுன்சிலர்கள் சோபி, ராமச்சந்திர பாபு முன்னிலை வைத்தனர்.மாவட்ட செயற்குழு உறுப்பினர் விஜய மோகன் போராட்டத்தை துவக்கி வைத்தார். வட்டார செயலாளர் ரெஜி, மாவட்ட குழு உறுப்பினர் மேரி ஸ்டெல்லா பாய், வட்டாரக்குழு உறுப்பினர் ஜஸ்டின் ராஜா ஆகியோர் விளக்கவுரையாற்றினார்கள். மாவட்ட செயலாளர் செல்லசாமி முடித்து வைத்து பேசினார்.
Tags:    

Similar News