பதக்கம் வென்ற போலீசாருக்கு டி.ஐ.ஜி. பாராட்டு

தமிழ்நாடு காவல்துறை சார்பில் மண்டல அளவில் நடைபெற்ற விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற போலீசாருக்கு டி.ஐ.ஜி. பாராட்டு தெரிவித்தார்.

Update: 2024-02-23 04:25 GMT

தமிழ்நாடு காவல்துறை சார்பில் மண்டல அளவில் நடைபெற்ற விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற போலீசாருக்கு டி.ஐ.ஜி. பாராட்டு தெரிவித்தார்.


தமிழ்நாடு காவல்துறை சார்பில் மண்டலங்களுக்கு இடையேயான தடகள போட்டிகள் கோயம்புத்தூரில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் கடந்த 12-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை நடை பெற்றது

. இப்போட்டிகளில் கடலூர் நகர போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் முதல் பரிசும், 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 2-ம் பரிசும், ஏட்டு அன்வர் அலி, குண்டு எறிதல் போட்டியில் 2-ம் பரிசும் வென்றனர். இதே போல் அமைச்சுப்பணியாளர்கள் சிலர், விளையாட்டு போட்டிகளில் வென்றுள்ளனர். இவர்கள் அனைவரும் விழுப்புரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. திஷா மித்தலை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

Tags:    

Similar News