மக்கள் குறைதீர் கூட்டத்தில் சலசலப்பு!

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டத்திற்கு அதிகாரிகள் வராததால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

Update: 2024-03-04 10:28 GMT

பொதுமக்கள்

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டத்திற்கு இன்று (மார்ச்.4) காலை 10:30 மணி வரை அதிகாரிகள் வரவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். மேலும் இதனால் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலிருந்து தங்களது புகார் மனுவுடன் பொதுமக்கள் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டது. இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
Tags:    

Similar News