இருளில் தவிக்கும் திண்டுக்கல் - அலட்சியம் காட்டும் மாநகராட்சி

Update: 2023-12-21 07:28 GMT

எரியாத மின் விளக்குகளால் இருள் 

திண்டுக்கல் நகரில் பெரும்பாலான பகுதிகளில் ரோட்டோர மின் விளக்குகள் எரியாமலிருப்பதால் இரவு,அதிகாலை நேரங்களில் இருள் சூழ்ந்து கிடக்கிறது. மாநகராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளாததால் குற்ற சம்பவங்களும் அதிகரிக்கிறது. இதனால் மக்களும் தினமும் மாநகராட்சியை வசைப்பாடுவதும் தொடர்கிறது.திண்டுக்கல் மாநகரில் மாநகராட்சி கட்டுப்பாட்டில் 48 வார்டுகள் உள்ளன. இங்குள்ள தெருக்கள்,ரோட்டோரங்களில் மாநகராட்சி சார்பில் மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது. மின் விளக்குகள் அமைத்து பல ஆண்டுகள் ஆனதால் பெரும்பாலான இடங்களில் மின்விளக்குகள் எரியாமலும்,சேதமாகியும் உள்ளது.இதை மாவட்ட நிர்வாகம் கண்காணித்து மாவட்ட தலைநகரான திண்டுக்கல் இரவில் ஒளி வெள்ளத்தில் மிதக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Tags:    

Similar News