பேரிடர் மேலாண்மை துறை இயக்குனர் ஆய்வு

தூத்துக்குடி மாவட்டத்தில் அதிகன மழை பாதிப்புகள் குறித்து சென்னை பேரிடர் மேலாண்மை துறை இயக்குனர் எஸ்.ஏ.ராமன்  ஆய்வு செய்தார். 

Update: 2024-01-08 05:31 GMT

ஆய்வு கூட்டம்

தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த அதிகன மழை காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து சென்னை பேரிடர் மேலாண்மை துறை இயக்குனர் எஸ்.ஏ.ராமன்  தலைமையில் துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம்  மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News