கோவில் விழாவில் வான வேடிக்கை ரத்தானதால் ஏமாற்றம்

குமாரபாளையம் காளியம்மன் கோவில் தேர் திருவிழாவில் வான வேடிக்கை ரத்தானது குறித்து அறநிலையத்துறைக்கு தொடர்பில்லை என பேனர் வைக்கபட்டதால் பொதுமக்கள் ஏமாற்றமடைந்தனர்.

Update: 2024-03-02 11:53 GMT

குமாரபாளையம் காளியம்மன் கோவில் தேர் திருவிழாவில் வான வேடிக்கை ரத்தானது குறித்து அறநிலையத்துறைக்கு தொடர்பில்லை என பேனர் வைக்கபட்டதால் பொதுமக்கள் ஏமாற்றமடைந்தனர்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் காளியம்மன் கோவிலில் வாண வேடிக்கை ரத்து ஆனது குறித்து அறநிலையத்துறைக்கு சம்பந்தம் இல்லை என பேனர் வைக்கபட்டதால் பொதுமக்கள் ஏமாற்றமடைந்தனர்.

குமாரபாளையம் அனைத்து சமூக காளியம்மன் கோவிலில் மகாகுண்டம் மற்றும் தேர்த்திருவிழா பிப். 13ல் பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. பிப். 20, மறு பூச்சாட்டுதல், பிப் 24ல் கொடியேற்றம் என தினசரி ஒரு நடந்தது. விழாவின் 15ஆம் நாளில் முக்கிய நிகழ்வான குண்டம் இறங்குதல் விழா நடந்தது. இதையடுத்து இரண்டு நாட்கள் தேர்த்திருவிழா நடந்தது. தேர்த்திருவிழா நிறைவு பெற்ற நாளில், கோவில் சார்பில், கோவில் மைதானம் மற்றும் காவிரி ஆற்றில் வாண வேடிக்கை நடப்பது வழக்கம்.

பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் இதனை காண பல ஊர்களிலிருந்து வருவார்கள். காளியம்மன் கோவிலில் மட்டும்தான் சுற்றுப்புற பகுதி கோவில்களில் வாண வேடிக்கை நடந்து வந்தது. திடீரென்று வாண வேடிக்கை ரத்து என்றதால் ஏராளமான பேர் கோவிலுக்கு வந்து ஏமாற்றத்துடன் திரும்பு சென்றனர். இது குறித்து மக்கள் நீதி மய்யம் மாவட்ட மகளிரணி அமைப்பாளர் சித்ரா கூறியதாவது: எனக்கு தெரிந்து காளியம்மன் கோவில் திருவிழாவில் வாண வேடிக்கை ரத்து செய்யப்பட்டது இதுவே முதல்முறை. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மிகவும் ரசித்து பார்க்கும் நிகழ்ச்சி வாண வேடிக்கை விழாதான்.

முன்பெல்லாம் காளியம்மன் கோவில் திருவிழா என்றால், புதன் கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை தினம் ஒரு நாடகம், இசை நிகழ்ச்சி, நடன நிகழ்ச்சி உள்ளிட்ட பல நிகழ்ச்சிகள் நடக்கும். ஆனால் பல ஆண்டுகளாக இந்த கோவிலில் எந்த கலை நிகழ்சிகளும் நடத்தப்படுவது இல்லை. ஈரோடு மகேஷ் போன்றவர்கள் இந்த கோவிலில் வந்து பேசிய பின்தான், அம்மன் அருளால் தனியார் தொலைக்காட்சிகளில் பங்கேற்று, தனக்கென ஒரு இடத்தை பிடித்து வருகிறார். இவர் போல் பல கலைஞர்கள் இங்கிருத்து முன்னேறியுள்ளனர். கலை நிகழ்சிகளை பார்க்கவே சுற்றியுள்ள கிராமப்பகுதி, அருகில் உள்ள பவானி பகுதியினர் திரண்டு வருவார்கள். காளியம்மன் கோவில் திருவிழா முன்பு போல் சிறப்பு இல்லை என்பதுதான் பெரும்பான்மையோரின் கருத்தாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News