நலிவுற்ற திமுக நிர்வாகிக்கு உதவித்தொகை வழங்கல்

கீழப்பாவூர் அருகே பொருளாதார நலிவில் சிரமப்படும் திமுக நிர்வாகியின் குடும்பத்திற்கு மாவட்ட திமுக சார்பில் உதவித்தொகை வழங்கப்பட்டது.

Update: 2024-03-04 04:10 GMT
உதவித் தொகை வழங்கல்
தென்காசி தெற்கு மாவட்டம், கீழப்பாவூர் மேற்கு ஒன்றியம், வெண்ணியூரைச் சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுனர் முப்புடாதி முத்து. திமுக கிளை அவைத்தலைவரான இவருக்கு 2 பெண் மாற்றுத்திறனாளி குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் அவரது குடும்ப சூழ்நிலை கருதி, மாவட்ட திமுக சார்பில் மாவட்ட பொறுப்பாளர் வே. ஜெயபாலன் ரூ. 50 ஆயிரம் உதவித்தொகையினை , முப்புடாதி முத்திடம் நேற்று வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட பிரதிநிதிகள் சமுத்திர பாண்டி, பொன்செல்வன், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ரமேஷ், மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் சுரண்டை முத்துக்குமார், மாவட்ட கவுன்சிலர் சாக்ரடீஸ், கடையம் வடக்கு ஒன்றிய செயலாளர் மகேஷ் மாயவன், நிர்வாகிகள் ராமர், மாரிமுத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News