நிவாரண பொருட்கள் அனுப்பிவைப்பு

வெள்ள பாதிப்பு நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது

Update: 2023-12-21 12:19 GMT

நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு 

திருநெல்வேலி ,தூத்துக்குடி, உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் பெய்த கனமழையால் ஏராளமான பொதுமக்கள் உடைமைகளை இழந்து தவிப்புக்குள்ளாகி வருகின்றனர் .இந்நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சமூக ஆர்வலர்கள் ,தன்னார்வ அமைப்பினர், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் பொருட்டு, நிவாரண பொருட்களை அனுப்பி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக பள்ளிபாளையம் காவல் நிலையம் சார்பில் சுமார் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் லுங்கி உள்ளிட்ட நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கும் நிகழ்வு நடைபெற்றது. பள்ளிபாளையம் காவல் ஆய்வாளர் சுகுமார் முன்னிலையில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நிவாரண பொருட்கள் அனுப்பிவைக்கப்பட்டது.

அங்கிருந்து நிவாரண பொருட்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனுப்பபட உள்ளது. இந்த நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்வின் பொழுது, பள்ளிப்பாளையம் உதவி காவல் ஆய்வாளர்கள் பிரபாகரன் ,சேகர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர் .

Tags:    

Similar News