ஈரோட்டிலிருந்து 12வது கட்டமாக நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு

Update: 2023-12-15 03:20 GMT

நிவாரணப்பொருட்கள்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
மிக்ஜாம் புயலினால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை மாவட்ட பொதுமக்களுக்கு ஈரோடு மாவட்ட நிர்வாகம் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சார்பில் பிரட், குடிநீர், பிஸ்கட், போர்வைகள், அரிசி, கோதுமை மாவு, ஆயில், பால் பவுடர், மெழுகுவர்த்தி, சோப்பு உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசிய பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஈரோடு மாவட்டத்திலிருந்து 12 ம் கட்டமாக 1,970 குடிநீர் பாட்டில்கள், 1,231 பிஸ்கட் பாக்கெட்கள், 612 போர்வைகள், பால் பவுடர் பாக்கெட்கள், நூடுல்ஸ், உப்பு, பூண்டு, அரிசி, ரவை, கோதுமை மாவு, உப்பு, புளி உள்ளிட்ட பல்வேறு மளிகை பொருட்கள், துணி வகைகள், மெழுகுவர்த்தி, கொசுவர்த்தி, பற்பசை, சோப்பு, நாப்கின் உள்ளிட்ட 6391 எண்ணிக்கையில் ரூ.6,89,854 மதிப்பீட்டிலான பல்வேறு அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய வாகனம் அனுப்பி வைக்கப்பட்டது.
Tags:    

Similar News