ஆலங்குளத்தில் குளங்களில் கொட்டப்பட்ட குப்பைகள் அகற்றம்

குளங்களில் கொட்டப்பட்ட குப்பைகளை நகராட்சி ஊழியர்கள் அகற்றினர்.

Update: 2024-05-18 10:51 GMT

 குப்பைகள் அகற்றம்

தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் உள்ள குளங்களில் பேரூராட்சி நிா்வாகம் சாா்பில் கொட்டப்படும் குப்பைகளால் சுகாதாரக் கேடு ஏற்படுவதாக தினமணியில் வெளியான செய்தி எதிரொலியாக குளத்தில் கொட்டப்பட்ட குப்பைகள அகற்ற உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆலங்குளத்தில் உள்ள முக்கிய நீராதாரங்களான தொட்டியான்குளம், குமிழன்குளம், பெட்டைக் குளம் ஆகியவற்றில் பேரூராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்டப்படுவதால் சுகாதாரக் கேடு ஏற்படுவது அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் குளங்களில் கொட்டப்பட்டிருக்கும் குப்பைகளை உடனடியாக அகற்ற உத்தரவிட்டனா். இதையடுத்து பொக்லைன் இயந்திரம், டிராக்டா் ஆகியவற்றின் உதவி கொண்டு அவற்றை அகற்றிய தூய்மைப் பணியாளா்கள், வளம் மீட்புப் பூங்காவில் கொண்டு சோ்த்தனா்.
Tags:    

Similar News