தென்மாவட்ட மக்களுக்காக ரூபாய் 10 ஆயிரம் மதிப்பில் நிவாரண பொருட்கள் வழங்கல்

மாற்றுத்திறனாளிகள் அறக்கட்டளை சார்பில் தென்மாவட்ட மக்களுக்காக ரூபாய் 10 ஆயிரம் மதிப்பில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.

Update: 2023-12-21 14:16 GMT

நிவாரண பொருட்களை அனுப்பி வைத்தனர் 

தென்மாவட்டத்தில் ஏற்பட்டு வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பேரிடர் வெள்ள நிவாரண பொருட்களாக ரூபாய் 10 ஆயிரம் மதிப்பில் உணவு பொருட்கள், பிஸ்கட் பாக்கெட்கள் குடிதண்ணீர் பாட்டில்களை இன்று மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளரிடம் சிகரம் மாற்றுத்திறனாளிகள் நல அறக்கட்டளை சிவகங்கை மாவட்டம் சார்பில் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் தலைவர் குணா, செயலாளர் உதயகுமார், பொருளாளர் சேகர், மகளிர் அணி மாநில தலைவி மனோரஞ்சிதம், காளையார் கோவில் ஒன்றிய தலைவர் குமார் மற்றும் நாகநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்

Tags:    

Similar News