போலியோ சொட்டு மருந்து மாவட்ட ஆட்சியர் வழங்கி முகாமை தொடங்கி வைத்தார்

தென்காசியில் போலியோ சொட்டு மருந்து முகாம் இன்று நடைபெற்றது

Update: 2024-03-03 04:57 GMT

போலியோ சொட்டு மருந்து முகாம்

தென்காசி மாவட்டம் தென்காசி நகராட்சி நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இன்று 3ம் தேதி காலை தேசிய பல்ஸ் போலியோ சொட்டு மருந்து முகாமினை தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கி முகாமை தொடங்கி வைத்தார். இதில் தென்காசி நகர்மன்ற தலைவர் சாதிர், நகர்மன்ற துணை தலைவர் சுப்பையா, மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் உள்ளிட்ட ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News