டாஸ்மாக் கடைகளின் மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவு

தர்மபுரி மாவட்டத்தில் வரும் 4ம்தேதி வாக்கு எண்ணிக்கையையொட்டி, மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

Update: 2024-06-01 02:23 GMT

தர்மபுரி மாவட்ட ஆட்சியர்

தர்மபுரி நாடாளுமன்ற தேர்தல், கடந்த ஏப்ரல் 19ம்தேதி நடந்தது. வாக்குப்பெட்டிகள் தர்மபுரி செட்டிக்கரை அரசு பொறியியல் கல்லூரியில் வாக்கு எண்ணும்மையத்தில் உள்ளது. வரும் 4ம்தேதி வாக்கு எண்ணப்படுகிறது. இதையொட்டி, தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அரசு மதுபான சில்லறை விற்பனை கடை கள் மற்றும் அவற்றுடன் இணைந்த மதுக் கூடங்கள், உரிமம் பெற்ற தனியார் ஓட்டல்களின் மதுக் கூடங்கள், முன்னாள் ராணுவ வீரர் கேண்டீன் ஆகியவற்றை மூடி வைக்க வேண்டும்.மீறி யாரேனும் மது விற்றாலோ அல்லது கள் எத்தனமாக மது விற்பனையில் ஈடுபட்டாலோ, சட்டப்படியான கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கலெக்டர் சாந்தி தெரிவித்துள்ளார்
Tags:    

Similar News