திருவாரூரில் மாவட்ட அளவிலான கலைத் திருவிழா
By : King 24X7 News (B)
Update: 2023-10-26 16:16 GMT
கலைத் திருவிழா
திருவாரூர் நகராட்சிக்கு உட்பட்ட வ.சோ ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி கல்வித்துறையின் சார்பில் அரசு பள்ளிகளில் பயிலும் ஆறாம் வகுப்பு முதல் பண்ணிரெண்டாம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான கலை திருவிழா போட்டிகளை மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ இன்று தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் திருவாரூர் நகர மன்ற தலைவர் புவனப்பிரியா செந்தில் திருவாரூர் நகர மன்ற துணைத் தலைவர் அகிலா சந்திரசேகர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்