தீபாவளி : பொதுமக்களுக்கு வேட்டி, சேலை வழங்கிய எம்எல்ஏ

Update: 2023-11-14 03:21 GMT

வேட்டி,சேலை வழங்கும் நிகழ்ச்சி 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட புதுப்பாளையம், அம்மாபாளையம் ஊராட்சியில் சமூக பாதுகாப்பு திட்டத்தின் மூலம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொது மக்களுக்கு வேட்டி,சேலையை எம்எல்ஏ சரவணன் வழங்கினார். நிகழ்ச்சிக்கு ஒன்றிய குழு தலைவர் சுந்தரபாண்டியன், தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் கி.ஆறுமுகம், பொதுக்குழு உறுப்பினர் இளங்கோவன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். பஞ்சாயத்து தலைவர் பூங்காவனம் ஜெயராஜ், அனைவரையும் வரவேற்றார். இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட எம்எல்ஏ சரவணன், பொது மக்களுக்கு தமிழக அரசு வழங்கும் இலவச வேட்டி சேலையை வழங்கினார்.பின்னர் அவர் பேசியதாவது. கலசப்பாக்கம் யூனியனில உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் இந்த இலவச வேட்டி சேலை வழங்கப்படும். புதுப்பாளையம் யூனியனில் உள்ள 403 பெண்கள , 117 ஆண்கள் என மொத்தம் 520 பயனர்களுக்கு வேட்டி சேலை வழங்கப்படுகிறது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒவ்வொரு குடும்பமும் முழுமையாக பயனடைய வேண்டும் என்பதற்காக பல திட்டங்களை அறிவித்து வருகிறார். அதேபோல் தீபாவளி, பொங்கல் பண்டிகைகளை சிறப்பான முறையில் கொண்டாட வேண்டும் என்பதற்காக பல சலுகைகளும் திட்டங்களும் வழங்கி உள்ளார். தமிழக மக்களுக்காக எண்ணற்ற பல திட்டங்களை முதலமைச்சர் வழங்கி வருகிறார். என்றார். நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் லட்சுமி, நிர்மலா, தனி தாசில்தார் ரேணுகா, துணை தாசிலர் துரைராஜ், ஒன்றிய கவுன்சிலர்கள் முனியப்பன், பாரதிதாசன், மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள்,அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News