தி.க. சார்பில் முப்பெரும் விழா பொதுக்கூட்டம்

குமாரபாளையத்தில் தி.க. சார்பில் முப்பெரும் விழா பொதுக்கூட்டம் நடந்தது.

Update: 2023-11-06 10:29 GMT
தி.க. பொதுக்கூட்டம்
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

குமாரபாளையத்தில் தி.க. சார்பில், பெரியார் 145 வது பிறந்த நாள் விழா, வைக்கம் போரட்ட நூற்றாண்டு  விழா, மற்றும் கருணாநிதி நூற்றாண்டு விழா ஆகியன முப்பெரும் விழாவாக கொண்டாடப்பட்டது. நகர தலைவர் சரவணன் தலைமை வகித்தார். பெரியாரின் திருவுருவப்படத்தினை நகர காங்கிரஸ் தலைவர் ஜானநிராமன், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் திருவுருவப்படத்தினை,நகராட்சி தலைவர் விஜய்கண்ணன் திறந்து வைத்து பேசினார்கள்.

சிறப்பு அழைப்பாளராக தலைமைக்கழக சொற்பொழிவாளர் பெரியார் செல்வம் பேசினார். இவர் பேசியதாவது: கருணாநிதிக்கு சிலை வைக்க வேண்டும் என்றும், சிலை ஏற்பாட்டு  பொறுப்புகுழு  நிர்வாகியாக நானே இருக்கிறேன் என்று பெரியார் கூறினார். ஒரு தேர்தலில் கூட தோல்வி பெறாத தலைவர் கருணாநிதி. ஒரு சொல்லில் பதில் சொல்லும் திறமை படைத்தவர் கருணாநிதி. இவ்வாறு அவர் பேசினார். நிர்வாகிகள் குமார், பெரியசாமி, சண்முகம், சாமிநாதன், புஷ்பா, ராஜி  சி.பி.எம். சக்திவேல், நகராட்சி துணை தலைவர் வெங்கடேசன் கவுன்சிலர்கள்  ஜேம்ஸ், கதிரவன், உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News