முன்னாள் மக்களவை உறுப்பினா் டி.கே.ரங்கராஜன் பிரச்சாரம்...

திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் போட்டியிடும் ரா.சச்சிதானந்தத்தை ஆதரித்து, அந்தக் கட்சியின் முன்னாள் மக்களவை உறுப்பினா் டிகே.ரங்கராஜன் பரப்புரை மேற்கொண்டாா்.

Update: 2024-04-04 09:01 GMT

திமுக

திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் போட்டியிடும் ரா.சச்சிதானந்தத்தை ஆதரித்து, அந்தக் கட்சியின் முன்னாள் மக்களவை உறுப்பினா் டிகே.ரங்கராஜன் புதன்கிழமை பரப்புரை மேற்கொண்டாா். திண்டுக்கல் நாகல்நகா் பகுதியில் நடைபெற்ற பரப்புரைக் கூட்டத்தில் அவா் பேசியதாவது: இந்தியாவைப் பொருத்தவரை ஜனநாயகத்தைப் பாதுக்காக்க வேண்டிய அவசியத்தோடு மக்களவைத் தேர்தலை எதிா் கொண்டிருக்கிறோம். ஆா்எஸ்எஸ் அமைப்பின் அரசியல் திரிபுதான் பாஜக. 370-ஆவது சட்டப் பிரிவை நீக்க காஷ்மீரை பிரித்த பாஜக, நாளை தமிழகத்திலும் பிரிவிணையை ஏற்படுத்தாது என்பதற்கு எந்தவித உத்தரவாதமும் கிடையாது. எனவே தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்றாா்.
Tags:    

Similar News