உசிலம்பட்டி அருகே திமுக வேட்பாளர் தங்கத்தமிழ்செல்வன் வாக்கு சேகரிப்பு

உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கனூரில் திமுக அரசின் சாதனைகளைக்கூறி திமுக வேட்பாளர் தங்கத்தமிழ்செல்வன் வாக்கு சேகரித்தார்.

Update: 2024-04-16 15:39 GMT

தங்க தமிழ்ச்செல்வன் வாக்கு சேகரிப்பு

உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கனூரில் திமுக அரசின் சாதனைகளைக்கூறி திமுக வேட்பாளர் தங்கத்தமிழ்செல்வன் வாக்கு சேகரித்தார். தமிழகத்தில் வருகின்ற 19ம் தேதி பாராளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது.இதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில்,

இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் வேட்பாளர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில் தேனி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் தங்கதமிழ்செல்வன் உதயகூூரியன் சின்னத்தில் போட்டியிடுகின்றார்.

இவர் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செட்டியபட்டி தொட்டப்பநாயக்கனூர் இடையபட்டி பூச்சிபட்டி ஆகிய கிராமப்பகுதிகளி;ல் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.தொட்டப்பநாயக்கனூரில் கிராமமக்கள் மாலை அணிவித்து உற்சாக வரவேற்ப்பு அளித்தனர்.

பின் அங்குள்ள ஜமீன் கோவிலில் சாமி வழிபாடு நடத்திய பின் கிராமமந்தையில் திமுக அரசின் சாhதனைகளைக் கூறி வாக்கு சேகரித்தார்.

Tags:    

Similar News