பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட விருப்ப மனு பெற்ற திமுக மாவட்ட கவுன்சிலர்

பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட திமுக மாவட்ட கவுன்சிலர் விருப்ப மனு பெற்றார்.

Update: 2024-02-24 08:36 GMT
பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட விருப்ப மனு பெற்ற திமுக மாவட்ட கவுன்சிலர்

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள கரிவலம்வந்தநல்லூர் பகுதியை சேர்ந்த மதி மாரிமுத்து. இவர் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் உதயசூரியன் சின்னத்தில் கடந்த உள்ளாட்சி தேர்தலில் வேட்பாளராக போட்டியிட்டு மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

மேலும் சங்ககரன்கோவில் வடக்கு ஒன்றிய திமுக செயலாளராகவும் அரசியல் பணியாற்றி வந்த நிலையில் தற்போது தென்காசி (தனி) நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட திமுக இணை அமைப்பு செயலாளர் அன்பகம் கலை-யிடம் விருப்ப மனுவை பெற்றுக்கொண்டார்.

உடன் தென்காசி வடக்கு மாவட்ட தலைமை பொதுக்குழு உறுப்பினர் வழக்கறிஞர் தேவா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

Tags:    

Similar News