ஆரணியில் திமுக நிர்வாகி அதிமுகவில் இணைவு
ஆரணியில் திமுக நிர்வாகி அதிமுகவில் இணைந்தார்.;
By : King 24X7 News (B)
Update: 2024-02-04 12:43 GMT
அதிமுகவில் இணைந்த திமுக நிர்வாகி
ஆரணி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில், முன்னாள் அமைச்சர், கழக அமைப்பு செயலாளர், சட்டமன்ற பேரவை மதிப்பீட்டு குழு உறுப்பினர், ஆரணி சட்டமன்ற உறுப்பினர் சேவூர்.S.இராமச்சந்திரன் தலைமையில் ஆரணி தொகுதி ஆரணி டவுன் சைதாப்பேட்டை 15-வது வார்டு சேர்ந்த திமுக நிர்வாகி, ஆட்டோ S.இமயவர்மன் (எ)மணி அக்கட்சியில் இருந்து விலகி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தில் அடிப்படை உறுப்பினராக இணைத்து கொண்டார்.
நிகழ்வில், ஒன்றிய கழக நிர்வாகிகள் M.ரத்தினகுமார், வடுகசாத்து G.சங்கர், நகர அம்மா பேரவை இணை செயலாளர் E.முனிரத்தினம், வட்ட கழக நிர்வாகிகள் மாணிக்கவேல்,மற்றும் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.