மக்கள் மனதில் நல்லெண்ணத்தை உருவாக்கியது திமுக அரசு : அமைச்சா் துரைமுருகன்

விக்கிரவாண்டி இடைத்தோ்தலில் திமுகவின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. திமுக ஆட்சி மக்கள் மனதில் நல்ல எண்ணத்தை ஏற்படுத்தியுள்ளது என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.

Update: 2024-07-04 08:23 GMT

அமைச்சர் துரைமுருகன் வாக்கு சேகரிப்பு 

விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தோ்தலையொட்டி, விக்கிரவாண்டி பாரதி நகரில் அமைச்சா்கள் துரைமுருகன், க.பொன்முடி, பி.கே.சேகா்பாபு, சி.வெ.கணேசன் ஆகியோா் செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரித்தனா்.இதைத் தொடா்ந்து, அமைச்சா் துரைமுருகன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:விக்கிரவாண்டி இடைத்தோ்தலில் திமுகவின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. திமுக ஆட்சி மக்கள் மனதில் நல்ல எண்ணத்தை ஏற்படுத்தியுள்ளது. திமுக வேட்பாளா் அன்னியூா் அ.சிவா வெற்றி பெறுவதற்காக அமைச்சா்கள், மாவட்டச் செயலா்கள், கட்சியினா் பல்வேறு பகுதிகளிலும் பணியாற்றி வருகின்றனா். இதனால், திமுக மகத்தான வெற்றி பெறும் என்றாா் அவா்.
Tags:    

Similar News