ஜெயங்கொண்டத்தில் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்த திமுக எம்எல்ஏ

ஜெயங்கொண்டத்தில் சிதம்பரம் மக்களவை தொகுதி இந்தியா கூட்டணி வேட்பளார் தொல்.திருமாவளவனை ஆதரித்து திமுக எம்எல்ஏ கண்ணன் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்தார்.

Update: 2024-04-16 06:26 GMT
பானை சின்னத்திற்கு வாக்கு சேகரித்த திமுக எம் எல் ஏ க.சொ.க. கண்ணன்.
ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி,தா.பழூர் ஒன்றியம்,தென்கச்சிபெருமாள்நத்தம் ஊராட்சியில், இந்தியா கூட்டணி சார்பில்,சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி  வேட்பாளராக போட்டியிடும் தொல்.திருமாவளவனுக்கு பானை சின்னத்தில் வாக்களிக்க கோரி,சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் வீடு வீடாக சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். இந்நிகழ்வில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் இராமநாதன்,மதிமுக ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன்,திமுக ஒன்றிய துணை செயலாளர் ராஜேந்திரன் மற்றும் கிளைக் கழக செயலாளர்கள், கூட்டணி கட்சி தோழர்கள், கட்சி முன்னணி நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர்.
Tags:    

Similar News