ஆத்தூரில் திமுக சார்பில் நீர்மோர் பந்தல்

பெத்தநாயக்கன்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது.

Update: 2024-04-29 15:27 GMT

தர்பூசணி வழங்கல்

தமிழகம் முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் பொதுமக்களுக்கு பல்வேறு அரசியலமைப்புகள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் தண்ணீர் பந்தல் அமைத்து நீர் மோர் பழங்கள் வழங்கி வருகின்ற நிலையில் இன்று சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் அன்பு என்ற தங்க மருதமுத்து தலைமையில் பேரூர் கழக செயலாளர் வெங்கடேசன் முன்னிலையில் நீர் மோர் பந்தலை சேலம் கிழக்கு மாவட்ட திமுக பொருளாளர் ஆத்தூர் ஸ்ரீராம் திறந்து வைத்து,

அப்பகுதி மக்களுக்கு பழங்கள் நீர் ஆகாரங்கள் வழங்கினார் இந்நிகழ்வில் பேரூராட்சி தலைவர் பழனியம்மாள் ராசாமணி பொதுக்குழு உறுப்பினர் முத்துலிங்கம் செயற்குழு உறுப்பினர்கள் வக்கீல் மனோகரன் சோமசுந்தரம் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News