திமுக சார்பில் கோடைக்கால நீர்மோர் பந்தல்

மல்லாங்கிணற்றில் திமுக வர்த்தகர் அணி சார்பில் கோடைக்கால நீர்மோர் பந்தல் திறக்கப்பட்டது.

Update: 2024-04-30 07:11 GMT
காரியாபட்டி அருகே மல்லாங்கிணற்றில் திமுக வர்த்தகர் அணி சார்பில் கோடைக்கால நீர்மோர் பந்தல் திறக்கப்பட்டது. தமிழக முழுவதும் சுற்றறிக்கும் வெயிலின் வெப்பத்தில் பொதுமக்கள் சிரமப்படும் நிலையில் திமுக கட்சியின் சார்பில் தமிழக முழுவதும் பல்வேறு இடங்களில் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே மல்லாங்கிணற்றில் விருதுநகர் திமுக வடக்கு மாவட்ட வர்த்தகர் அணி சார்பில் அமைக்கப்பட்ட கோடைகால நீர் மோர் பந்தலை திமுக வர்த்தக அணி அமைப்பாளர் போஸ் (எ) ஜெயச்சந்திரன் திறந்து வைத்தார். அப்போது பொதுமக்களுக்கு தர்பூசணி, இளநீர், வெள்ளரிக்காய், மற்றும் நீர், மோர் போன்ற குளிர்பானங்களை வழங்கினார்கள். இந்நிகழ்ச்சிகளில் காரியாபட்டி ஒன்றிய செயலாளர் மந்திரிஓடை கண்ணன், மல்லாங்கிணறு பேரூராட்சி சேர்மன் துளசிதாஸ், நகரச் செயலாளர் முருகேசன், வர்த்தக அணி மாவட்ட துணை அமைப்பாளர்கள் சதீஷ் சுந்தர், சேவகன், விருதுநகர் நகர அமைப்பாளர் ரெங்கராஜ், கவுன்சிலர் பாலச்சந்திரன், சிவகாசி மாநகர வர்த்தக அணி துணை அமைப்பாளர் வேல்முருகன், காரியாபட்டி ஒன்றிய அமைப்பாளர் பஜார் குரு, உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News