கடையநல்லூரில் மருத்துவர்களை கௌரவித்த தமுமுக கட்சியினர்
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே மருத்துவர்களை கௌரவித்த தமுமுக கட்சியினர்.
Update: 2024-02-25 11:57 GMT
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே புளியங்குடி அரசு மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவராக நியமிக்கப்பட்டுள்ள மகப்பேறு மருத்துவர் மருத்துவர் நிவேதிதாவை தமுமுக கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா அவர்கள் எழுதிய "நபிகளாரின் சமூக உறவு" என்ற நூல் மருத்துவருக்கு வழங்கி கௌரவித்தனர். மேலும் காது, மூக்கு, தொண்டை மருத்துவர் டாக்டர் அபிநயா மற்றும் நர்சிங் சூப்பர்வைசர் பாலமுருகன் அவர்களுக்கும் நபிகளாரின் சமூக உறவு நூல் வழங்கி கௌரவித்தனர். இந்த நிகழ்ச்சியில் தமுமுக கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டனர்.