திமுக ஆட்சிதான் மக்களின் பொற்காலம்: அமைச்சர் கீதாஜீவன்

திமுக ஆட்சிதான் மக்களின் பொற்காலம். மக்கள் நலன் தான் முக்கியம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பணியாற்றுகிறார் என்று அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்தார்.

Update: 2024-05-09 04:56 GMT

அமைச்சர் ஆய்வு 

தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் புதிய பேவர் பிளாக் சாலைகள் தார்சாலைகள் கழிவுநீர் கால்வாய்கள் மின்விளக்குகள் அமைக்க வேண்டும் என்று பல்வேறு பகுதி பொதுமக்கள் ஏற்கனவே கோாிக்கை வைத்திருந்தனர். தேர்தல் நடைமுறைக்கு பின்னர் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு அப்பகுதி மக்களிடம் குறைகளை கேட்டறிந்து வருகிறார்.

38வது வார்டுக்குட்பட்ட மேலூர் பங்களா தெரு பகுதியில் நடைபெறும் பணிகளை பார்வையிட்டு பொதுமக்களை சந்தித்து தங்களது குறைகள் குறித்து கேட்டறிந்தார். மக்களுடன் கலந்துரையாடலில் பேசும் போது திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின் இந்த பகுதிக்கு புதிய திட்டங்கள் குறிப்பாக சாலை வசதி, கழிவு நீர் கால்வாய் வசதி, செய்து கொடுக்கப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் எந்த பணியுமே நடைபெறாமல் இருந்ததை நீங்கள் அறிவீர்கள் மக்களுக்காக தொடா்ந்து பணியாற்றும் கட்சி திமுக தான். திமுக ஆட்சிதான் உங்களுக்கு பொற்காலம் தமிழக முதலமைச்சர் முக.ஸ்டாலினும் மக்கள் நலன் தான் முக்கியம் என்று கருதி பணியாற்றுகிறார். அவரது வழியில் உங்களது சில கோாிக்கைகளையும் ஒன்றன் பின் ஒன்றாக முழுமையாக செய்து கொடுப்பேன், என்று உத்தரவாதம் அளித்தார்.

மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், வட்டச்செயலாளர் கங்காராஜேஷ், பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், வட்டப்பிரதிநிதி பாஸ்கர், மற்றும் மணி, அல்பட், உள்பட பலர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News