ஓட்டுக்காக ஜெயலலிதா புகழ்!

ஓட்டுக்காக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை பா.ஜ.க., வினர் புகழ்வதாக தி.மு.க., தகவல் தொழில்நுட்ப அணி இணைச் செயலாளர் மகேந்திரன் பேசினார்.

Update: 2024-03-04 06:37 GMT

பொதுக்கூட்டம்

தி.மு.க., தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், 71-வது பிறந்தநாள் மற்றும் 2024ம் ஆண்டின் நிதிநிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டம் நீலகிரி மாவட்டம் நெல்லியாளத்தில் நடந்தது. இதில் தி.மு.க., தகவல் தொழில்நுட்ப அணி இணைச் செயலாளர் மகேந்திரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, வரும் 2024 நாடாளுமன்ற தேர்தல் யார் வர வேண்டும் என்பதற்கான தேர்தல் இல்லை யார்வர கூடாது என்பதற்கான தேர்தல். பா.ஜ.க.,வின் தமிழக துரோகங்கள் பொய் பிரச்சாரங்கள் ஏமாற்று வேலைகள் என்ன என்பதை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும். பிரதமர் தற்போது வாரம் வாரம் தமிழ்நாடு வருகிறார். இரண்டு மூன்று தமிழ் வார்த்தைகளை கற்று கொண்டு தமிழ்நாட்டுக்கு வந்து பேசினால் தமிழர்கள் ஓட்டு பேட்டு விடுவார்கள் என நினைக்கிறார். பா.ஜ.க., வால் அ.தி.மு.க., தமிழ்நாட்டில் சிதறி கிடக்கிறது. தமிழ்நாடு நலனில் பா.ஜ.க., வுக்கு அக்கறையே இல்லை ஓட்டுக்காக இப்போது ஜெயலலிதா புகழ்பாடுகின்றனர். ஐ.டி மற்றும் ஈ.டி பா.ஜ.க., ஆளும் மாநிலங்களில் வேலை செய்வது இல்லை பா.ஜ.க., ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் சிறப்பாக வேலை செயவது போல் காட்டி, மாற்று கட்சிகளுக்கு பயத்தை ஏற்படுத்த நினைகின்றனர்.ஜி.எஸ்.டி., மூலம் நாம் மத்திய அரசுக்கு வழங்கும் வரி பணத்தில் 29 பைசா மட்டுமே தமிழகத்திற்கு வழங்கபபடுகிறது. ஆனால் உத்திர பிரதேசம், பீகார், மத்தியபிரதேசம் போன்ற மாநிலங்களுக்கு 4ரூபாய் ,5ரூபாய், 6ரூபாய் வழங்குகின்றனர். தமிழ்நாட்டின் உரிமைகளை விட்டு கொடுக்காமல் போரடுவது தி.மு.க., மட்டுமே. முதன் முதலாக மாநில கட்சி ஆட்சிக்கு வந்தது, தமிழ்நாட்டில் தான். செழிப்பான சிறப்பான ஆட்சி தமிழ்நாட்டில் நடக்கிறது. தி.மு.க., வின் இந்த மக்கள் ஆட்சிக்கு, மக்கள் என்றும் துணையாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
Tags:    

Similar News