குப்பிச்சிபாளையம் பகுதியில் திமுக பிரமுகர் நூதன பிரச்சாரம்

குப்பிச்சிபாளையம் பகுதியில் திமுக தலைமை கழக பேச்சாளர் கோவிந்தன், குடுகுடுப்பை வாசித்தவாறு பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

Update: 2024-02-10 11:26 GMT

குடுகுடுப்பை வாசிப்பு

விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்படும் உள்ள நிலையில் திமுக தலைமைக் கழக பேச்சாளர்களின் ஒருவரான சேலம் கோவிந்தன் என்பவர். குடுகுடுப்பை வாசித்தவாறு பிரச்சாரம் ஈடுபட்டார்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்து தெக்காலூர் குப்பச்சிபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் திமுக தலைமைக் கழக பேச்சாளர்களின் ஒருவரான சேலம் கோவிந்தன் என்பவர் இந்தியா கூட்டணிக்கு வாக்களிக்க கோரி வீதிகள் தோறும் சென்று தனது தேர்தல் பிரச்சாரத்தை துவங்கியுள்ளார்.

தாராபுரம் தெக்கலூர் குப்பிச்சிபாளையம் சுற்றுவட்டார கிராமங்களுக்கு நேரடியாக வீதிகளில் சென்ற அவர் இந்தியா கூட்டணிக்கு வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்க கோரி குடுகுடுப்பை வாசித்தவாறு பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இந்நிகழ்வு அப்பகுதியில் உள்ள கிராம மக்களை வெகுவாக கவர்ந்தது.

Tags:    

Similar News