மறைமலைநகர் நகராட்சியில் திமுகவினர் வாக்கு சேகரிப்பு

மறைமலைநகர் நகராட்சியில் திமுகவினர் வாக்கு சேகரித்தனர்.

Update: 2024-04-14 14:04 GMT
மறைமலைநகர் நகராட்சியில் திமுகவினர் வாக்கு சேகரிப்பு

செங்கல்பட்டு மாவட்டம்,மறைமலை நகர் நகராட்சியில் காஞ்சிபுரம் மக்களவை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் க.செல்வம் மற்றும் செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன் ஆகியோர் 21 வார்டுகளில் தீவிரமாக வாக்கு சேகரித்தனர்.

இதில் தலைவர் ஜெ.சண்முகம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மூர்த்தி, நகர்மன்ற துணைத்தலைவர் சித்ரா கமலக்கண்ணன், வடக்கு மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் வினோத், வடக்கு மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் கமலக்கண்ணன்,நகர்மன்ற உறுப்பினர்கள் விஜியலட்சுமி நித்தியானந்தம்,

சுரேஷ், உள்ளிட்ட நகர்மன்ற உறுப்பினர்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சங்கர் விசிக மாவட்ட செயலாளர் தென்னவன் மற்றும் கூட்டணி கட்சியினர் ,ஏராளமான திமுக தொண்டர்கள் பங்கேற்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News