ஆரணியில் திமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறக்கும் நிகழ்ச்சி

ஆரணி பழைய பேருந்து நிலையம் அருகே தி.மு.க. சார்பில் தண்ணீர் பந்தல் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2024-05-05 13:24 GMT

தண்ணீர் பந்தல் திறப்பு 

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பழைய பேருந்து நிலையம் எம்.ஜி.ஆர்.சிலை அருகே தி.மு.க. சார்பில் தண்ணீர் பந்தல் திறக்கும் நிகழ்ச்சி திருவண்ணாமலை மாவட்ட சுற்றுச்சூழல் செயலாளர் இப்ராஹிம் ஷெரிப் தலைமையில் நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளராக தி.மு.க. மருத்துவ அணி மாநில துணைத்தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன் கலந்து கொண்டு தண்ணீர் பந்தலை திறந்து வைத்தார் . இதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு மோர், குளிர்பானம், தர்பூசணி, பப்பாளி, ஐஸ்கிரீம் உள்ளிட்டவற்றை வழங்கினார்.

Tags:    

Similar News