திமுக மகளிர் தொண்டரணி - நிவாரணப் பொருட்கள் - கனிமொழி எம்.பி வழங்கினார்

திமுக மகளிர் தொண்டரணி சார்பில் நிவாரணப் பொருட்கள் - கனிமொழி கருணாநிதி எம்.பி வழங்கினார்

Update: 2023-12-22 17:20 GMT

தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு ஒன்றியம் ஆத்திகுளம் ஊராட்சிப் பகுதி மக்களுக்கு திமுக மாநில மகளிர் தொண்டரணி செயலாளா் நாமக்கல் ப.ராணி ஏற்பாட்டில், தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி கனிமொழி கருணாநிதி தலைமையில் ரூ 5 லட்சம் மதிப்புள்ள வெள்ள நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது. நாமக்கல் கிழக்கு மாவட்ட கழக செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் மற்றும் வனத்துறை அமைச்சர் டாக்டர் .மா.மதிவேந்தன் ஆகியோர் அறிவுறுத்தலின்படி, கடந்த தினங்களுக்கு முன் தென் மாவட்டங்களில் பெய்த கன மழையால் வீடுகளையும், வாழ்வாதாரங்களையும் இழந்து தவிக்கும் பொது மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கும் வகையில் நாமக்கல் கிழக்கு மாவட்ட மகளிர் தொண்டரணி சார்பில் திமுக மாநில மகளிர் தொண்டரணி செயலாளா் நாமக்கல் ப.ராணி ஏற்பாட்டில், கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதியான தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு ஒன்றியம் ஆத்திகுளம் ஊராட்சிப் பகுதி மக்களுக்கு வழங்க ரூ 5 லட்சம் மதிப்புள்ள நிவாரணப் பொருட்களை வேன் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு ஒன்றியம் ஆத்திகுளம் ஊராட்சிப் பகுதியில் வெள்ள நிவாரண பொருட்களை தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி கனிமொழி கருணாநிதி தலைமையில் அப்பகுதி மக்களுக்கு வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் மாநில மகளிர் அணி செயலாளர், ஹெலன் டேவிட்சன், மாநில தொண்டரணி செயலாளர் நாமக்கல் ராணி முன்னிலை வகித்தனா். மாவட்ட மகளிர் தொண்டர் அணி சார்பாக வழங்கப்பட்டது மாவட்ட மகளிர் துணை அமைப்பாளர் லதா, மகளிர் தொண்டரணி துணை அமைப்பாளர்கள் வழக்கறிஞர் கீதா, தங்கம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

Tags:    

Similar News