குஷ்பூவின் உருவ பொம்மையை எரிக்க முயன்றதால் பரபரப்பு

திருப்பூரில் மகளிர் உரிமை திட்ட பயனாளிகளை இழிவாக பேசிய பாஜக நிர்வாகி நடிகை குஷ்புவின் உருவ பொம்மையை திமுக மகளிர் அணியினர் எரிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2024-03-14 07:20 GMT

சென்னையில் நடைபெற்ற போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகையும் , தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு தமிழகத்தில் திமுக அரசு வழங்கி வரும் மகளிர் உரிமை தொகையை கொச்சைப்படுத்தும் வகையில் பேசி இருந்தார்.

இதற்கு பல்வேறு தரப்பினரும் தங்களை எதிர்ப்பை வெளிப்படுத்தி இருந்த நிலையில் திருப்பூர் குமரன் நினைவகம் முன்பாக திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக மகளிர் அணியினர் திமுக அரசின் நலத்திட்டத்தை கொச்சைப்படுத்தும் வகையில் பேசிய குஷ்புவிற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் அவரது உருவப் பொம்மையை எரிக்க முயற்சித்தனர்.

உடனடியாக அதனை தடுக்க முயன்ற காவல்துறையினருக்கும் மகளிர் அணியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து குஷ்புவின் உருவப்படத்தை செருப்பால் அடித்த குஷ்புவிற்கு எதிராக கோஷங்கள் எழுப்பி மகளிர் அணியினர் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இதனால் திருப்பூர் குமரன் நினைவகம் முன்பாக சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News