தமிழகத்தை அதிக கடன் பெற்ற மாநிலமாக மாற்றியது தான் திமுகவின் சாதனை

தமிழகத்தை அதிக கடன் பெற்ற மாநிலமாக மாற்றியது தான் திமுகவின் சாதனை என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Update: 2024-03-31 10:26 GMT

பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதுார் லோக்சபா தொகுதி, ஸ்ரீபெரும்புதுாரில் நேற்று தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அவர் பேசியதாவது: தேசிய ஜனநாயககூட்டணி இம்முறை 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று, தனி பெரும்பான்மையுடன் இந்த லோக்சபா தேர்தலில் ஆட்சி அமைக்கப் போகிறது.

அடுத்த ஐந்து ஆண்டுகளில் இதுவரை அரசியல் காரணங்களுக்காக யாரும் எடுக்காத முடிவை பிரதமர் மோடி எடுக்க போகிறார். ஸ்ரீபெரும்புதுார் தொகுதியில் பா.ஜ., கூட்டணி வேட்பாளர் தவிர, யார் வென்றாலும் எதிர்க்கட்சி வரிசையில் தான் இருப்பார்கள். நமது த.மா.கா., வேட்பாளர் வேணுகோபால் வெற்றி பெற்றால், மத்திய அரசின் திட்டங்கள் அனைத்தும் இந்த தொகுதிக்கு வந்தடையும். '

முத்ரா' கடன் திட்டத்தின் கீழ், சிறு, குறு நிறுவனங்களுக்கு, 2 லட்சம் கோடி ரூபாயை மத்திய அரசு வழங்கி, நடுத்தர மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தியுள்ளது. மேலும், 45 லட்சம் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6,000 ரூபாய் மத்திய அரசு வழங்கி வருகிறது. நெல்லுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை 67 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் மட்டும், 41,455 வீடு, 2,16,311 இலவச குடிநீர் இணைப்பு, 89,873 பேருக்கு இலவச கழிப்பறைஉள்ளிட்டவற்றை மத்திய அரசு வழங்கியுள்ளது.

ஆனால், தி.மு.க., அரசு பொறுப்பேற்று 33 மாதங் களில், 3.50 லட்சம் கோடி ரூபாய் கடன் பெற்று, தமிழகத்தில் மொத்த கடனை 8.50 லட்சம் கோடி ரூபாயாகஉயர்த்தி, நாட்டிலேயே அதிக கடன் பெற்ற மாநிலமாக மாற்றி உள்ளது. பால் விலை, சொத்து வரி, மின் கட்டணம் உள்ளிட்ட அனைத்தையும் உயர்த்தி, தங்களின் சொத்து மதிப்பை உயர்த்திக் கொள்வது தான் தி.மு.க., அரசின் சாதனை.

Tags:    

Similar News