நாகப்பட்டினம் மாவட்டம் முழுவதும் மோப்பநாய் படை பிரிவினர் தீவிர சோதனை....

நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் மோப்பநாய் படை பிரிவினர் தீவிர சோதனையில் ஈடுப்பட்டனர்.

Update: 2024-04-06 08:45 GMT

 தீவிர சோதனை

நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் மோப்பநாய் படை பிரிவினர் தீவிர சோதனை வருகின்ற 2024 பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு நாகப்பட்டினம் மாவட்ட காவல்துறையினரால் பல்வேறு பாதுகாப்பு முன்னேற்பாடு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது, அதன் ஒரு பகுதியாக நாகை மாவட்டத்தில் முக்கியமான இடங்களில் மோப்பநாய் படை பிரிவு போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வந்த இந்த தீவிர சோதனையானது நாகூர் தர்கா, நாகூர் கடை தெரு, நாகூர் புதிய பேருந்து நிலையம், மற்றும் வேளாங்கண்ணிமாதா கோவில்,வேளாங்கண்ணி பேருந்து நிலையம் ஆகிய முக்கிய இடங்களில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். மேலும் வேறு யாரேனும் நபர்கள் சந்தேகம் படும் வகையில் பொது இடங்களில் சென்றாலும் அல்லது பதுங்கி இருந்தாலும் அது குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க பிரத்தியோக தொலைபேசி எண்ணான 8428103090 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தஹர்ஷ் சிங் தெரிவித்துள்ளார்கள்.
Tags:    

Similar News