பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய டிரைவர் போக்சோவில் கைது

பெரம்பலூரில் பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய டிரைவர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

Update: 2024-06-25 12:56 GMT

கைது செய்யப்பட்ட டிரைவர்

பெரம்பலூர் அரசு மருத் துவமனையில் 16 வயதுடைய 10-ம் வகுப்பு முடித்துள்ள மாணவி சிகிச்சைக்கு சேர்ந்தார். அவர் 8 மாத கர்ப்பிணியாக இருந்தார். இது குறித்து மருத்துவர்கள் பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் போலீசார், அங்கு வந்து மாணவியை கர்ப்பமாக்கியவர் யார்? என்பது குறித்து விசாரணையை தொடங்கினர். விசாரணையில், மாணவியை கர்ப்பமாக்கியது பெரம்பலூர் மாவட்டம், லாடபுரம் ஒட்டர் தெருவை சேர்ந்த லாரி டிரைவர் சிவபால் வயது 36, என்பது தெரியவந்தது.

இது குறித்து போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக் குப்பதிவு செய்து சிவபாலனை இன்று கைது செய்தனர். சிவபாலுக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு ஆண் குழந்தை உள்ளது என்பதும், மாணவி கர்ப்பமாக இருந்ததால், பிளஸ்-1 வகுப்பு சேராமல் இருந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News