மதுரையில் விபத்தை ஏற்படுத்தும் வாகன ஓட்டிகள்

மதுரையில் நான்கு வழிச்சாலையில் விதிகளை மீறி விபத்தை ஏற்படுத்தும் வாகன ஓட்டிகளால் அச்சம் ஏற்பட்டுள்ளது

Update: 2024-02-04 13:24 GMT

சாகசம் செய்யும் வாகன ஓட்டிகள் 

மதுரையில் இருந்து பரமக்குடி வரை நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டு வாகனப் போக்குவரத்து நடந்து வருகிறது. தினசரி ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் இப்பாதை வழியாக கமுதி, பரமக்குடி, ராமநாதபுரம், ராமேஸ்வரம், சாயல்குடி சென்று வருகின்றன.

திருப்பாச்சேத்தி டோல்கேட் அருகே நான்கு சக்கர வாகனத்தை இரண்டு இரு சக்கர வாகன ஓட்டிகள் இரு புறமும் கால்களை வைத்து வெள்ளிகுறிச்சி விலக்கு வரை பயணம் செய்தனர்.

நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்ட பின் விபத்து குறைந்து வரும் நிலையில் ஒரு சிலர் விதிகளை மீறி இது போன்று நடந்து கொள்வதால் விபத்து அபாயம் உள்ளதாக வாகன ஓட்டிகள் புகார் தெரிவிக்கின்றனர்

Tags:    

Similar News