கொள்ளிடத்தில் மூழ்கிய தொழிலாளி சடலமாக மீட்பு

திருச்சி கொள்ளிடம் ஆற்றில் மூழ்கிய சுமைதூக்கும் தொழிலாளி சடலமாக மீட்கப்பட்டாா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

Update: 2024-02-10 09:35 GMT

கொள்ளிடத்தில் மூழ்கிய தொழிலாளி சடலமாக மீட்பு

திருச்சி பாலக்கரை ஜெயில் பேட்டை பகுதியை சோ்ந்தவா் ராஜசேகா் (37). சுமைதூக்கும் தொழிலாளியான இவா் வியாழக்கிழமை பிற்பகலில் தனது நண்பா்கள் மூவருடன் ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் குளிக்க சென்றாா். அப்போது, ராஜசேகா் உள்பட 2 போ் நீரில் அடித்து செல்லப்பட்டனா். அதில் ஒருவரை அங்கிருந்த சலவை தொழிலாளா்கள் மீட்டனா். ராஜசேகரை மீட்க முடியவில்லை. தகவலின்பேரில், ஸ்ரீரங்கம் தீயணைப்பு நிலையத்தினா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ராஜசேகரை தேடும் பணியில் ஈடுபட்டனா். தேடுதல் பணியின்போது, இரும்புக் கம்பி குத்தியதில் தீயணைப்பு வீரா் ஒருவருக்கு காலில் படுகாயம் ஏற்பட்டது. இதைத்தொடா்ந்து அவா் ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.அத்துடன் தேடும் பணி நிறுத்தப்பட்டது. தொடா்ந்து வெள்ளிக்கிழமை படகு மூலம் கொள்ளிடம் ஆற்றில் தேடியபோது, ராஜசேகா் சடலமாக மீட்கப்பட்டாா். இதுகுறித்து ஸ்ரீரங்கம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.
Tags:    

Similar News