போதை பொருட்களை கடத்திய நபர் கைது

காடையாம்பட்டி அருகே ஹான்ஸ் போன்ற போதை பொருட்களை கடத்திய நபரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2023-12-30 02:39 GMT

சேலம் மாவட்டம், காடையாம்பட்டி அருகே உள்ள தீவட்டிப்பட்டி வழியாக கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து தமிழக அரசு தடை செய்யப்பட்ட ஹான்ஸ் போன்ற போதை பொருட்கள் கடத்துவதாக தீவட்டிப்பட்டி காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் தீவட்டிப்பட்டி போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்பொழுது பெங்களூருவில் இருந்து சேலத்தை நோக்கி அதி வேகமாக வந்த ஒரு மினி லாரியை நிறுத்தி சோதனை செய்தனர்.

Advertisement

அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் போன்ற போதை பொருட்கள் இருப்பதை தீவட்டிபட்டி போலீசார் கண்டறிந்தனர். பின்னர் மினி லாரி மற்றும் கடத்தலில் ஈடுபட்ட நபரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அதில் ராஜஸ்தான் மாநிலம் ஜோலார் ஜோரு என்ற பகுதியை சேர்ந்த பவானி சிங் என்பவருடைய மகன் சஞ்சய் குமார் என்பதும் அவர் சட்ட விரோதமாக ஹான்ஸ் போன்ற போதை பொருட்கள் கடத்தியதும் தெரியவந்தது. இதைதொடர்ந்து அவர் மீது வழக்கு பதிவு செய்து தீவட்டிப்பட்டி போலீசார் சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News