குடிபோதையில் தகராறு - கணவர் மீது வெந்நீர் ஊற்றிய மனைவி மீது வழக்கு !
தக்கலை அருகே குடிபோதையில் தகராறு செய்த கணவன் மீது வெந்நீரை ஊற்றிய மனைவி மீது போலீசார் வழக்கு பதிவு.;
By : King 24x7 Angel
Update: 2024-04-09 05:02 GMT
வழக்கு
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட வண்டவிளை பகுதியை சேர்ந்தவர் ஹரிதாஸ் கொத்தனார். இவரது மனைவி லதா.கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று இரவு, குடிபோதையில் வீட்டுக்கு வந்த ஹரிதாஸ் மனைவியிடம் தகராறு செய்துள்ளார். அப்போது ஆபாசமாக திட்டியதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த லதா அடுப்பில் இருந்த வெந்நீரை எடுத்து கணவர் ஹரிதாஸ் முகத்தில் ஊற்றினார். இதில் அவருக்கு உடல் முழுவதும் பலத்த காயம் ஏற்பட்டது. இந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஹரிதாசை மீட்டு, ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து தக்கலை போலீசார் விசாரணை நடத்தி ஹரிதாஸ் அளித்த புகாரின் பேரில் அவரது மனைவி லதா மீது நேற்று வழக்கு பதிவு செய் துள்ளனர்.