மது போதையில் முதியவரை தாக்கிய டிரைவர் கைது!

திருப்பூரில் மது போதையில் முதியவரை தாக்கிய டிரைவரை வீரபாண்டி போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\

Update: 2024-05-20 10:37 GMT

திருப்பூரில் மது போதையில் முதியவரை தாக்கிய டிரைவரை வீரபாண்டி போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்பூரில் மது போதையில் முதியவரை தாக்கிய டிரைவர் கைது! திருப்பூர் வீரபாண்டி கல்லாங்காடு பகுதியை சேர்ந்தவர் ரவிக்குமார் (வயது 28) லாரி டிரைவர். இவர் நேற்று முன்தினம் இரவு குடிபோதையில் வீட்டுக்கு அருகே நின்றிருந்த 60 வயது முதியவரை தாக்கி செல்போனை உடைத்து தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதுகுறித்து அருகில் இருந்தவர்கள் வீரபாண்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ரவிக்குமாரை பிடித்து வந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் ஏற்கனவே ரவிக்குமார் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் வழக்குகள் இருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Tags:    

Similar News