குடிபோதையில் வழக்கறிஞர் கார் கண்ணாடி உடைப்பு - இருவர் மீது வழக்குப்பதிவு!

உக்கடம் புறவழிச்சாலை பகுதியில் மதுபோதையில் காரின் கண்ணாடி உடைப்பு.

Update: 2024-02-25 06:58 GMT

விசாரணை

கோவை:உக்கடம் புறவழிச்சாலை பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் சஞ்சய்(29). வழக்கறிஞரான இவர் நேற்று மாலை தனது நண்பரை சந்திக்க அவரது காரில் சென்றுள்ளார். அசோகா சதுக்கம் பகுதியில் உள்ள மதுபான கடை அருகே காரை சஞ்சய் நிறுத்திவிட்டு அவரது நண்பருடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது டாஸ்மாக் கடையில் இருந்து மதுபோதையில் வெளியே வந்த இருவர் காரின் மீது கல் எறிந்ததில் கண்ணாடி உடைந்தது. இதுகுறித்து சஞ்சய் கேட்டபோது மதுபோதையில் இருந்த நபர்கள் அவரை தகாத வார்த்தைகளால் திட்டியதுடன் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து சஞ்சய் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த செல்வபுரம் போலீசார் மேற்கொண்ட இச்சம்பவத்தில் ஈடுபட்ட மோகன் மற்றும் மோகன் குமார் ஆகிய இருவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News