மது போதையிலிருந்த சுமைதூக்கும் தொழிலாளி வெட்டி படுகொலை

சிவகாசியில் மது போதையிலிருந்த சுமைதூக்கும் தொழிலாளியை வெட்டி படுகொலை செய்த குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2024-06-04 06:04 GMT
மோப்பநாய் உதவியுடன் சோதனை 

 விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள முத்துராமலிங்கம் நகர் பகுதியைச் சேர்ந்தவர் முத்துப்பாண்டி,இவர் லோடுமேனாக தொழில் செய்து வருகிறார்.இந்த நிலையில் சிவகாசி திருத்தங்கல் சாலையில் உள்ள அண்ணாநகர் பகுதியில் அமர்ந்து மது அருந்தி கொண்டிருந்தார்,அப்பொழுது அங்கு வந்த மர்ம நபர்கள் முன்பகை காரணமாக அவரை அறிவாளால் வெட்டி கொலை செய்து விட்டு தப்பி ஓடியுள்ளனர்

.இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலே துடிதுடித்து உயிரிழந்தார்.இது குறித்து அந்த வழியில் சென்றவர்கள் உடனடியாக சிவகாசி நகர் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர் தகவலின் பெயரில் விரைந்து வந்த காவல்துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் சம்பவம் நடந்த இடத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா மற்றும் மாவட்டத்துணை காவல் கண்காணிப்பாளர் சுப்பையா ஆகியோர் நேரில் விசாரணை மேற்கொண்டனர.மேலும் மோப்பநாய் உதவியுடன் குற்றவாளிகளை தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.இந்த கொலை சம்பவம் குறித்து சிவகாசி நகர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News