திருச்சியை தலைநகரமாக மாற்ற ஆசை - துரைமுருகன்

திருச்சியை தலைநகரமாக மாற்ற வேண்டும் என்பது எனது தனிப்பட்ட ஆசை‌ என துரைமுருகன் கூறியுள்ளார்.

Update: 2023-11-28 14:41 GMT

திருச்சியை தலைநகரமாக மாற்ற ஆசை என துரைமுருகன் பேட்டி  

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

திருச்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், 'திருச்சி மாவட்டம், முக்கொம்பு ஆற்றின் நடுவே புதிதாக கட்டப்பட்ட பாலம் இன்னும் ஒரு வாரத்தில் திறக்கப்படும். தமிழ்நாட்டில் மணல் கொள்ளை அதிகளவு நடந்துள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. அதில் எந்த உண்மையும் இல்லை என நாங்கள் நிரூபிப்போம். திருச்சியை தலைநகரமாக மாற்ற வேண்டும் என்பது, எனது தனிப்பட்ட ஆசை எனக் கூறினார். தொடர்ந்து, தமிழ்நாட்டில் அ.தி.மு.க., ஆட்சியில் அதிக ஊழல் நடந்ததாக புகார்கள் வந்த நிலையில், தற்போது தி.மு.க., அமைச்சர்களின் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை தொடர்ச்சியாக நடைபெறுகிறதே? என்ற கேள்விக்கு அவர்கள் வேறு நாங்கள் வேறு என தெரிவித்தார்.

Tags:    

Similar News