மழையால் கிழக்கு கடற்கரை சாலை துண்டிப்பு

அதிகனமழையால் துண்டிக்கப்பட்ட கிழக்கு கடற்கரை சாலை பகுதிகளை மார்கண்டேயன் எம்எல்ஏ ஆய்வு செய்தார்.

Update: 2023-12-27 06:18 GMT

மார்கண்டேயன் எம்எல்ஏ ஆய்வு 

தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் -  பட்டினமருதூர்  கிழக்கு கடற்கரை சாலை மழையால் துண்டிக்கப்பட்டதை சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் துறை சார்ந்த அதிகாரியுடன் ஆய்வு மேற்கொண்டு சாலையை விரைவில் சீரமைப்பதற்கு  நடவடிக்கை மேற்கொண்டார். ஆய்வின்போது, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணைய திட்ட இயக்குனர்  ராவுத், ஆணைய தல பொறியாளர் வீரராஜேஷ் மணி, ஓட்டப்பிடாரம் ஒன்றிய துணைப் பெருந்தலைவர் காசி விஸ்வநாதன், ஒன்றிய குழு உறுப்பினர் ராஜ், ஊராட்சி மன்ற தலைவர் வேல்கனி, வடக்கு மாவட்ட முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் இமானுவேல், மாவட்ட பிரதிநிதி சத்தியராஜ், குதிரைகுளம் ஊராட்சி மன்ற தலைவர் சண்முகையா,  உட்பட துறை சார்ந்த அதிகாரிகள் திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
Tags:    

Similar News