EB-யில் உதவியாளர் வேலை என மோசடி
திண்டுக்கல்லை சேர்ந்த வாலிபருக்கு EB-யில் உதவியாளர் போலி நியமன ஆணை கொடுத்து ரூ.5 லட்சம் மோசடி செய்த நபர் மீது வழக்கு பதிவு;
திண்டுக்கல், மேட்டுப்பட்டியை சேர்ந்த சிங்கராயர் மகன் ஜேம்ஸ்ராஜன் என்பவருக்கு சென்னை ESI ஆஸ்பத்திரியில் சோசியல் ஒர்க்கராக பணியாற்றும் வைரமணி என்பவர் EB-ல் உதவியாளர் பணி வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறி ரூ.5 லட்சம் பெற்றுக் கொண்டு செல்போன் வாட்ஸ் அப் மூலம் போலி பணி நியமன ஆணை அனுப்பி மோசடி செய்ததாக ஜேம்ஸ்ராஜன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் புகார் அளித்தது தொடர்ந்து மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி குமரேசன் தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்நிலையில் வைரமணி, சரவணன், மூர்த்தி உள்ளிட்ட பல்வேறு நபர்களிடமும் வேலை வாங்கித் தருவதாக பணம் பணம் பெற்றுக் கொண்டு மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.