முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருந்தால்... எடப்பாடி பழனிச்சாமி
'முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருந்தால் பாதிப்பை குறைத்திருக்கலாம்' என அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
Update: 2023-12-19 10:50 GMT
நெல்லை மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று நேரில் ஆய்வு செய்தார். பின்பு செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், 'முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருந்தால் பாதிப்பை குறைத்திருக்கலாம். வானிலை மைய அறிவுரை அடிப்படையில் அரசு நடவடிக்கை எடுத்திருந்தால் மக்களை காத்திருக்கலாம் என கூறினார். இந்த பேட்டியின் பொழுது அதிமுகவினர் உடன் இருந்தனர்.